×

காங். பிரமுகர் நினைவு தினம்

தேவகோட்டை, பிப்.3: முன்னாள் எம்.எல்.ஏ. ராம.கரியமாணிக்கம் அம்பலம் 24ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது மகனும், காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராமசாமி எம்.எல்.ஏ, அவரது மகன் அகில், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கருமாணிக்கம் மற்றும் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கரியமாணிக்கம் அம்பலம் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் சானாவயல் முத்துராமன், திருப்பாக்கோட்டை ஜோதிநாதன், வட்டாரத் தலைவர் பூங்குடி வெங்கடாசலம், தொழிலதிபர் ஊடுபோகி கதிரேசன், பொன்பேத்தி வள்ளாலமோகன், காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்டத்தலைவர் புஷ்பராஜா, கண்ணங்குடி வட்டாரத் தலைவர் துடுப்பூர் ராஜ்மோகன், தேவகோட்டை நகர் தலைவர்கள் (கிழக்கு) வழக்கறிஞர் இரவுசேரி சஞ்சய், (மேற்கு)லோகநாதன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கண்ணங்கோட்டை கணேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலரான மீரா உசேன், மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் டாக்டர் கவிஞர் அப்பச்சிசபாபதி, மாநில இலக்கிய அணி செயலாளர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Celebrity Memorial Day ,
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...